ஜொகூரில் 130 வெளிநாட்டினர் கைது!

top-news

பிப்ரவரி 18,

ஜொகூரில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த 130 வெளிநாட்டினர்களை ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 14 இரவு நடத்தப்பட்ட சோதனையில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இரண்டு உள்ளூர் ஆடவர்களும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 54 வயதினர் என்றும் அவர்கள் முறையான ஆவணங்களின்றி மலேசியாவில் வேலை செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்னாம், இந்தியா, பங்களாதேஷ், மியான்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

Jabatan Imigresen Johor menahan 130 warga asing berusia 18 hingga 54 tahun dalam serbuan pada 14 Februari kerana tinggal secara haram di Malaysia. Dua warga tempatan turut ditahan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *