பள்ளி முடிந்து காணாமல் போன 15 வயது சிறுமி!

top-news
FREE WEBSITE AD

குவாந்தான், ஜூன் 21-


பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பாமல் இருந்ததைத் தொடர்ந்து 15 வயதுடைய ஒரு சிறுமி காணாமல் போனது தெரிய வந்தது.
கடந்த வியாழக்கிழமை காணாமல் போன அச்சிறுமி நிக் நூர் ஹிடாயா நிக் அப்துல்லா என்பவராவார் என்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஸாஹாரி வான் புசு தெரிவித்தார்.

மாநிறம், 140 முதல் 150 செ.மீட்டர் வரையிலான உயரம். சாதாரண உடல் மற்றும் முகத்தில் பரு இல்லாமல் இருப்பாள். சம்பவத்தின் போது இவள் பள்ளிச் சீருடையை அணிந்திருந்ததாக கூறப்பட்டது. இவள் காணாமல் போனதை உணர்ந்த 49 வயதுடைய இவளது தாயார் பள்ளி முதன்மை கதவின் முன்புறத்தில் 1 மணி நேரமாகக் காத்திருந்த போதிலும் இவளது தோழிகள் யாரையும் காணவில்லை.

அவர் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நுழைந்து ஆசிரியரிடம் விசாரித்தது மட்டுமின்றி நிக் நூர் ஹிடாயாவைத் தேடினார். எனினும், அவளைக் காணவில்லை.
சிறுமியின் தாயாருக்குத் தெரிந்த ஒருவர் மகள் வெள்ளை நிற பெரோடுவா அக்ஸியா ரக காரில் ஒருவருடன் பள்ளியின் பின்புற கதவு வழியாகச் சென்றதாகக் கூறினார்.புகார் செய்ததன் அடிப்படையில் ஆகக் கடைசியாக இவர் தன் மகளைக் காலை 6.30 மணிக்குப் பள்ளிக்கு அனுப்பும் போது பார்த்திருக்கிறார்.

சம்பவத்திற்கு முன்பு தங்களுக்குள் எந்த சண்டையும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.அதே சமயம் அன்றைய தினத்தில் இவர் தன் மகளுக்கு வாட்சாப் மூலமாகத் தகவல் அனுப்பி இவருக்கு பதிலும் கிடைத்திருக்கிறது. இருந்த போதிலும் அச்சிறுமியை இன்னும் காணவில்லை. ஆகையால், இச்சிறுமி காணாமல் போனது பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக ஓர் அறிக்கையில் ஏசிபி வான் முகமட் ஸாஹாரி வான் புசு குறிப்பிட்டார்.

 Seorang remaja perempuan berusia 15 tahun, Nik Nur Hidayah, dilaporkan hilang selepas tidak pulang dari sekolah. Kali terakhir dilihat menaiki kereta bersama individu tidak dikenali. Polis meminta orang ramai menyalurkan maklumat bagi membantu siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *