இவ்வாண்டில் 200,000 நபர்கள் திவால் நிலையிலிருந்து விடுவிக்கப்படலாம்!

top-news
FREE WEBSITE AD

ஷாஆலம், ஜூன் 24-

இவ்வாண்டு இறுதிக்குள் இரண்டு லட்சம் பேரை திவால் நிலையிலிருந்து விடுவிக்க அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளது.இவ்வாண்டு இதுவரை 186,000 பேர் திவால் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர் என்று பிரதமர்துறை (சட்டம் மற்றும் துறைசார் சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் சைட் நேற்று தெரிவித்தார்.

திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நபர்கள் தங்களின் வாழ்க்கையை தொடர்ந்து நடத்துவதற்கு  ஏதுவாக இரண்டாவது வாய்ப்பை வழங்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், அவர்களைப் பற்றிய விவரங்களை மலேசியத் திவால்துறையிடமிருந்து நாங்கள் பெற்றுள்ளோம். இவ்வாண்டு முடிவடைவதற்குள் இரண்டு லட்சம் பேரை திவால் நிலையிலிருந்து மீட்டுக் கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று யூஐடிஎம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற
நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அஸாலினா தெரிவித்தார்.

இரண்டு லட்சம் வெள்ளிக்கும் மேற்பட்ட கடன் வைத்துள்ள நாற்பது வயதுக்கும் குறைந்தவர்களுக்கு "இரண்டாம் வாய்ப்புக் கொள்கை” விரிவுபடுத்தப்படும் என்று 2025ஆம் ஆண்டு தேசிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசியபோது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை மொத்தம் 25,578 திவால் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றும் அஸாலினா கூறினார்.

Kerajaan bercadang membebaskan 200,000 individu daripada status muflis menjelang akhir tahun ini. Sehingga kini, 186,000 orang telah dibebaskan. Inisiatif ini memberi peluang kedua kepada mereka yang terjejas, kata Menteri Undang-Undang, Datuk Seri Azalina.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *