ரோஸ்மா எதிரான 34.6 கோடி டாலர் வழக்கு-புதிய நீதிபதி தலைமையில் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 20-

டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரிடமிருந்து முப்பத்து நான்கு கோடியே அறுபது லட்சம் டாலர் இழப்பீடு கோரி 1எம்டிபி நிறுவனமும் பத்து இதர நிறுவனங்களும் தொடுத்துள்ள வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி வான் முகமது அமின் வான் யாஹ்யா செவிமடுப்பார். வாதிகளான 1எம்டிபி நிறுவனத்தையும் இதர பத்து நிறுவனங்களையும் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் விலாஷா அன்பழகன் நேற்று இதனைத் தெரிவித்தார்.

புதிய நீதிபதி வான் முகமது அமின் தலைமையில் வியாழக்கிழமை (நேற்று) வழக்கின் முதல் மேலாண்மை நடைபெற்றது. அடுத்தாண்டு பிப்ரவரி 7ஆம் தேதியன்று சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் வழக்கின் நிலையை நேர்செய்துகொள்ள வேண்டும் என்று விலாஷா குறிப்பிட்டார். காணொளி வாயிலாக நடைபெற்ற மேலாண்மைக்குப் பின்னர் புலனம் (வாட்ஸ்அப்) வாயிலாக அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த வழக்கை செவிமடுக்கக்கூடாது எனும் ரோஸ்மாவின் விண்ணப்பத்தை கடந்த மாதம் ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி லியோங் வாய் ஹோங் அந்த வழக்கைச்
செவிமடுப்பதினின்றும் விலகிக் கொண்டார்.
1எம்டிபியும் அதன் ஐந்து நிறுவனங்களும் இவ்வாண்டு மே மாதம் 9 ஆம் தேதியன்று ரோஸ்மாவுக்கு எதிராக அந்த இழப்பீட்டு வழக்கைத் தாக்கல் செய்தன. அந்த வழக்கில் இதர ஐந்து நிறுவனங்களும் வாதிகளாக பின்னர் இணைந்து கொண்டன.

அந்த வழக்கில் ரோஸ்மா முதல் பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். நதாஷா மீர்புரி என்று அறியப்படும் ஷப்னம் நாராயண்தாஸ் டஸ்வாணி எனும் மற்றொரு பெண்மணி இரண்டாவது பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.முப்பத்தாறு கோடியே அறுபது லட்சம் டாலரை அல்லது நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும் ஒரு நியாயமான ஒரு தொகையைத் தங்களுக்கு இழப்பீடாக வழங்கும்படியும் வாதிகள் கோரியுள்ளனர்.

ரோஸ்மாவின் கைவசம் இருந்ததாக நம்பப்படும் விலை மதிப்புவாய்ந்த ஆபரணங்களும் இதர ஆடம்பரப் பொருட்களும் தங்களுக்கே சொந்தம் என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று 1எம்டிபி நிறுவனமும் ஐந்து துணை நிறுவனங்களும் கோரியுள்ளன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *