நாட்டின் புதிய IGP-ஆக Khalid Ismail நியமனம்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 20: நாட்டின் புதிய ஐஜிபி யாக காலிட் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

புக்கிட் அமான் சிறப்புப் பிரிவு இயக்குநரான காலிட் இஸ்மாயில், ஜூன் 23 முதல் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் புதிய காவல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 22 ஆம் தேதியுடன் முடிவடையும் டான்ஸ்ரீ ரசாருதீன் ஹுசைனிடமிருந்து ரவர் பொறுப்பை ஏற்கிறார்.

 ஜூன் 2023 இல் இரண்டு ஆண்டு காலத்திற்கு ஐஜிபியாக நியமிக்கப்பட்ட ரசாருதீன், தனது தாயாரின் விருப்பத்திற்கு மதிப்பளித்து தனது ஒப்பந்தத்தை நீட்டிக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார்.

60 வயதான காலிட், ஏப்ரல் 1987 இல் காவல் படையில் சேர்ந்தார். புக்கிட் அமானில் சிறப்புப் பிரிவில் தனது பணியைத் தொடங்கினார்.

சிறப்புப் பிரிவு I இன் துணை இயக்குநர் மற்றும் லண்டனில் உள்ள மலேசிய உயர் தூதரகத்தில் பாதுகாப்பு தொடர்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

ஏப்ரல் 2023 இல் சிறப்புப் பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்ட அவர், ஏப்ரல் 2025 இல் கட்டாய ஓய்வு வயதை அடைவதற்கு முன்பு. பின்னர் அவரது சேவை ஒப்பந்த அடிப்படையில் நீட்டிக்கப்பட்டது, அது நடைமுறையில் உள்ளது.

பிரதமரின் ஆலோசனை மற்றும் காவல் படை ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவுகள் 140(4) மற்றும் 140(5) இன் படி, பேரரசரின் ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ரசாருதீனின் சேவைகளுக்கு நன்றி தெரிவித்த அவர், காலிட்டின் நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்!

Khalid Ismail dilantik sebagai Ketua Polis Negara baharu mulai 23 Jun bagi menggantikan Razarudin Husain. Beliau berkhidmat sejak 1987 dan pernah memegang pelbagai jawatan penting. Pelantikan dibuat atas nasihat Perdana Menteri dan perkenan Yang di-Pertuan Agong.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *