மகாதீரின் கருத்துகள் காலாவதியானவை! - சுற்றுலாத்துறை அமைச்சர் சாடல்

- Shan Siva
- 25 Nov, 2024
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 25: சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார
அமைச்சர் தியோங் கிங் சிங், சீன மொழியில் உள்ள சைன்போர்டுகளை
விமர்சித்ததற்காக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரைத் தாக்கியுள்ளார்.
இத்தகைய
விமர்சனங்கள் நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் சுற்றுலாத் துறையை பாதிக்கும் என்று
அவர் குறிபிட்டுள்ளார்.
மலேசியா மற்ற தென்கிழக்கு ஆசிய
நாடுகளைப் போலல்லாமல், சீன எழுத்துக்களை முக்கியமாகக் காட்சிப்படுத்த
கடைகளை அனுமதித்துள்ளதாக மகாதீர் கூறினார. மேலும், இது சீனாவிலிருந்து வரும் ஏராளமான சுற்றுலாப்
பயணிகளின் வருகையின் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
ஆனாலும், மகாதீரின் அறிக்கை
ஒற்றுமையை வளர்க்கவோ அல்லது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கவோ சிறிதும்
செய்யவில்லை என்று தியோங் கூறினார். இது நாட்டின் பன்முக கலாச்சார சமூக
கட்டமைப்பையும் எதிர்மறையாக பாதிக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஒரு (மூத்த)
அரசியல்வாதி என்ற முறையில், காலாவதியான கருத்துக்களைப் பற்றிக் கொள்ளாமல், நிலையான தேசிய வளர்ச்சியை உறுதிசெய்ய புதிய தலைமுறைக்கு ஆதரவளித்து, அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்று தியோங் தனது முகநூல் பதில்
அறிவுறுத்தியுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *