சைஃபுதீன் அனுமதி அளிக்கவில்லை! – நஜிப் வழக்கறிஞர் குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 20: உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் அனுமதி அளித்திருந்தால், நஜிப் ரசாக் அரச மன்னிப்பு  தொடர்பாக காவல் துறை புகார் அளிக்க சிறைத்துறை அனுமதித்திருக்கும் என்று நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர் ஷஃபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அமைச்சரிடமிருந்து அனுமதி கோரி அனுப்பப்பட்ட பல கடிதங்களுக்கு பதிலளிக்கப்படாததால், தனது கட்சிக்காரரின் சார்பாக புகார் அளிக்க உதவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஷஃபி அப்துல்லா கூறினார்.

 சிறை அதிகாரிகள் தாராள மனப்பான்மை கொண்டவர்கள், நஜிப் தானே அறிக்கை தாக்கல் செய்வதில் அவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, அவர்களுக்கு அவர்களின் மேலதிகாரியான உள்துறை அமைச்சரின் அனுமதி தேவைப்பட்டது என்று ஷஃபி கூறினார்.

அவருக்குப் பலமுறை கடிதம் எழுதியும் எந்த பதிலும் இல்லை என்று ஷஃபி  இன்று நீதிமன்ற வளாகத்தின் லாபியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

Peguam Najib Razak, Shafee Abdullah, menyatakan bahawa laporan polis mengenai pengampunan diraja boleh dibuat jika Menteri Dalam Negeri memberi kebenaran. Namun, tiada jawapan diberi walaupun surat dihantar berkali-kali kepada menteri, menyebabkan wakil terpaksa membuat laporan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *