அரச குடும்ப ஒருவரை திருமணம் செய்ததாக போலி திருமணச் சான்றிதழ் மோசடி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 19:

கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஒரு பெண், தான் ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறி போலி திருமணச் சான்றிதழை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

சபாவின் கோத்த கினாபாலுவைச் சேர்ந்த 43 வயதான பெர்சானா அவ்ரில் சொல்லுண்டா என்ற அப்பெண் மீது, நீதிபதி நோர்மா இஸ்மாயில் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233(1)(a) இன் கீழ், அதிகபட்சமாக RM500,000 அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பிப்ரவரி 25 ஆம் தேதி டிக்டோக் கணக்கைப் பயன்படுத்தி அவர் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், நீதிமன்றம் அவருக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன் RM10,000 ஜாமீன் வழங்கியதுடன், ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 17 ஆம் தேதியை நிர்ணயித்தது.
வழக்கு முடியும் வரை மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.

Seorang wanita didakwa di mahkamah kerana memuat naik sijil perkahwinan palsu ke media sosial, mendakwa berkahwin dengan kerabat diraja. Beliau dibebaskan dengan jaminan RM10,000 dan perlu melapor diri sebulan sekali di balai polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *