RAFIZI சும்மா இருந்தால் போதும்! AKMAL SALEH சாடல்!

top-news

ஜூன் 21,


முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak மீதான RM27 மில்லியன் SRC International நிதி பணமோசடியிலிருந்து உயர்நீதிமன்றம் விலக்கு அளித்திருப்பது குறித்து முன்னாள் அமைச்சர் Datuk Seri Rafizi Ramli கருத்து தெரிவிக்க தகுதியற்றவர் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Akmal Saleh தெரிவித்தார். நஜீப்பிற்கு எதிரான வழக்கில் எந்தவோர் ஆதாரமும் இல்லை. இதைத் தெரிந்தே 2018 இல் பக்காத்தான் ஆட்சியின் போது Datuk Seri Rafizi Ramli போன்றவர்கள் நஜீப்பிற்கு எதிராக வழக்கு தொடுத்ததாக மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினரான Datuk Dr Akmal Saleh சாடினார். 

நஜீப்பைப் பழிவாங்க நினைக்கும் Datuk Seri Rafizi Ramli போன்றவர்களால் இந்த வழக்கு முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு என Datuk Dr Akmal Saleh தெரிவித்தார். நஜீப்பிற்கு எதிராக கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்ட வழக்கில் எந்தவோர் ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்றால் என்ன காரணம்? எந்த ஆதாரமும் இல்லை என்பது தான் ஒரே காரணம், நஜீப் எனும் மிக பெரும் ஆளுமைகளைக் கேள்வி கேட்கும் தகுதி பழிவாங்கும் எண்ணம் கொண்ட Datuk Seri Rafizi Ramli போன்றவர்களுக்குக் கிடையாது என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Akmal Saleh கடுமையாகச் சாடினார்.


Ketua Pemuda UMNO, Dr. Akmal Saleh, mengkritik Rafizi Ramli, menyatakan beliau tidak layak komen tentang pembebasan Najib dalam kes SRC. Beliau menuduh Rafizi hanya mahu membalas dendam politik tanpa bukti kukuh terhadap bekas Perdana Menteri itu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *