மலாக்கா ஜ.செ.கவில் போட்டியின்றி மாநில தலைமைத்துவம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, நவ. 25-

2021ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் மலாக்கா ஜனநாயக செயல் கட்சி ஜ.செ.கவில் போட்டியின்றி மாநில தலைமைத்துவம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.அம்மாநிலத்தில் ஜ.செ.க உறுப்பினர்களிடையே ஏற்பட்ட ஒருமித்த கருத்திணக்கத்தின் படி, மாநில தலைமைத்துவத்துக்கு 15 பெயர்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

“இந்த முறை தேர்தல் நடத்த வேண்டும் என்றாலும், 15 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டதால் அதை நடத்த வேண்டாம் என்று போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் ஒருமித்து முடிவெடுத்துள்ளனர்.எனவே யார் பரிந்துரைக்கப்பட்டுள்ளாரோ அவர்கள்தான் புதிய மாநிலக் குழுவை அமைப்பர், " என்றார் அவர்.நேற்று 21ஆவது மலாக்கா மாநில ஜ.செ.க பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அவர் அவ்வாறு தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *