ஈரான் விவகாரத்தை மலேசியா தீவிரமாக கண்காணிக்கிறது! - அன்வார்

- Shan Siva
- 17 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 17: இஸ்ரேலின் அண்மைய இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானில்
அதிகரித்து வரும் மோதலை மலேசிய அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும், ஆனால் தற்போது அப்பகுதியில் உள்ள மலேசியர்களை
வெளியேற்றுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கடந்த
வெள்ளிக்கிழமை, இஸ்ரேல் ஈரானிய
பிரதேசத்தில் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. இதில் பல உயர்மட்ட
இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்குப்
பதிலடியாக, இஸ்ரேலில் பல
இடங்களில் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது, இதன் விளைவாக பல உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரானில் உள்ள எந்த மலேசியர்களும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்பதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது!
Kerajaan Malaysia sedang memantau rapat ketegangan meningkat di Iran susulan serangan Israel, namun belum membuat keputusan mengeluarkan rakyat Malaysia di sana. Tiada rakyat Malaysia dilaporkan cedera atau terjejas dalam insiden tersebut setakat ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *