பொது நிதியைப் பங்குச் சந்தையில் முதலீடு - செய்த ஆடவருக்குத் தடுப்புக் காவல்!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, ஜூன் 19-

ஊராட்சி மன்றத்தின் நிதியிலிருந்து சுமார் 5 கோடி ரிங்கிட்டை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிகார மோசடியில் ஈடுபட்ட குற்றஞ்சாட்டு தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, மலாக்கா ஊராட்சி மன்றத்தின் முன்னாள் நிதி துறை இயக்குநர் ஒருவர். ஏழு நாள்களுக்குத் தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டுள்ளார்.

57 வயதான அந்த ஆடவரை, ஜூன் 23ஆம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் என்.சிவசங்கரி உத்தரவிட்டார்.
மலாக்கா மாநில எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் அச்சந்தேக நபரை, நேற்று காலை ஒன்பது மணியளவில், ஆயர் குரோ நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வந்தனர். மலாக்காவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில், விளக்கமளிக்க வந்தபோது, அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

2020 தொடங்கி 2023ஆம் ஆண்டு வரை பொது நிதியைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நோக்கத்திற்காக, வங்கி ஒன்றில் பணிபுரியும் தமது மனைவியை முதலீட்டு முகவராக நியமித்து இச்செயலை புரிந்ததாக நம்பப்படுவதாக எஸ்.பி.ஆர்.எம் வட்டாரம் தெரிவித்துள்ளது.நிதி நிர்வகிப்பவர்களின் ஒப்புதலின்றி பொது நிதியையும் அறக்கட்டளை நிதியையும், அச்சந்தேக நபர் பயன்படுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது நடவடிக்கை குறித்தும், இவ்வழக்கு 2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்ஷன் 23இன் கீழ் விசாரிக்கப்படுவதாகவும், பெர்னாமா தொடர்புக் கொண்ட போது மலாக்கா மாநில எஸ்.பி.ஆர்.எம் இயக்குநர் அடி சுஃபியான் ஷாஃபி உறுதிப்படுத்தினார்.

Bekas pengarah kewangan Majlis Perbandaran Melaka direman tujuh hari disyaki salah guna kuasa, melabur RM5 juta dana awam ke pasaran saham melalui isterinya tanpa kebenaran. Kes disiasat bawah Seksyen 23 Akta SPRM 2009.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *