தனியார் மருத்துவக் கட்டணங்கள் கட்டுப்படுத்தப்படும்! – அன்வார் உறுதி!

- Sangeetha K Loganathan
- 17 Jun, 2025
ஜூன் 17,
தனியார் சுகாதார நிலையங்களின் கட்டணங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை அரசாங்கம் உறுதிச் செய்யும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim உறுதியளித்தார். சுகாதாரப் பரிசோதனைகளின் கட்டணங்கள் மட்டுமின்றி பாராபட்சமற்ற சுகாதாரப் பராமரிப்புகளைத் தனியார் மருத்துவமனைகள் உட்பட அனைத்து சுகாதார மையங்களும் மேற்கொள்ள வேண்டுமென Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார். தனியார் சுகாதார மையங்களின் கட்டண உயர்வுகள் சாமானியர்களுக்கு மிகுந்த சுமையைத் தருவதாகவும் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
தனியார் சுகாதார மையங்களின் கட்டணங்களையும் அதன் சுகாதாரப் பராமரிப்புகளையும் கண்காணிக்க சிறப்புப் பணிக்குழுவை அமைப்பதாகவும் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். நிதி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து இந்த சிறப்புப் பணிக்குழுவை அமைக்கும் என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். மருத்துவச் செலவுகள் மட்டுமின்றி அனைத்து வகையிலானச் சுகாதாரப் பரிசோதனைகளுக்கும் அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் கட்டணத்தை விடவும் அதிகம் வசூலிக்காமல் இருப்பதை இந்த சிறப்புப் பணிக்குழு கண்காணிக்கும் என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
PM Anwar Ibrahim memberi jaminan kerajaan akan mengawal kadar bayaran rawatan di pusat perubatan swasta bagi mengurangkan beban rakyat. Pasukan khas melibatkan Kementerian Kewangan dan Kementerian Kesihatan akan ditubuhkan untuk memantau caj perkhidmatan kesihatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *