நஜீப்பின் விடுதலை! நான் தலையிடவில்லை! அன்வார் விளக்கம்!

top-news

ஜூன் 20,


முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak சம்மந்தப்பட்ட RM 27 மில்லியன் SRC International பணமோசடி வழக்கிலிருந்து விலக்கு பெற்றிருப்பது நீதிமன்றத்தின் உத்தரவு என்றும் தாம் அதில் தலையிடவில்லை என்றும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim இன்று விளக்கமளித்தார். இது சட்டம் சம்மந்தப்பட்டது. இது நீதிபதியின் முடிவு. அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் (AGC) சம்மந்தப்பட்டது. இதில் நான் எங்கும் சம்மந்தப்படவில்லை என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim குறிப்பிட்டார். 

பிரதமராக என் பொறுப்பிலிருந்து விலகி நான் எதையும் செய்யமாட்டேன் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றும் சட்டத்தை மீறி யாரும் செயல்பட கூடாது என்பதில் தாம் தெளிவாக இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim சுருக்கமாகத் தெரிவித்தார். முன்னதாக உயர்நீதிமன்றம் முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak சம்மந்தப்பட்ட RM 27 மில்லியன் SRC International பணமோசடி வழக்கில் அரசு தரப்பினர் போதுமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்காததால் வழக்கிலிருந்து முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak விலக்கு பெறுவதாக உத்தரவிட்டது.


Perdana Menteri Anwar Ibrahim menegaskan beliau tidak campur tangan dalam keputusan mahkamah membebaskan Najib daripada kes SRC RM27 juta. Katanya, keputusan dibuat oleh mahkamah dan Peguam Negara, serta beliau kekal patuh pada undang-undang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *