யார் அடுத்த தேசியக் காவல்துறை தலைவர் என்பதை விரைவில் சொல்கிறேன்! – அன்வார்

top-news

ஜூன் 19,


தேசிய காவல்துறையின் தற்போதைய தலைவர் Tan Sri Razarudin Husain எதிர்வரும் ஜூன் 22 ஓய்வு பெறும் நிலையில் அடுத்த காவல்துறை தலைவர் யார் எனும் எதிர்ப்பார்ப்பு பொதுமக்களிடையும் காவல் அதிகாரிகளிடையும் மிகுந்திருப்பதைத் தாம் உணர்ந்திருப்பதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார். ஆனால் தேசியக் காவல்துறை தலைவரின் நியமனம் குறித்து மாமன்னர் Sultan Ibrahim Sultan Iskandar அன்வாரிடம் இன்று தெரிவிப்பதாக வெளிவந்த செய்திகளைப் பிரதமர் அன்வார் மறுத்தார். தேசிய காவல்துறைத் தலைவரின் நியமனம் குறித்து முறையான கலந்துரையாடல் மாமன்னரிடம் நேரடியாக நடத்தப்படும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார்.

முன்னதாக அடுத்த தேசிய காவல்துறை தலைவராகும் பெயர்பட்டியலில் 3 உயர் காவல் அதிகாரிகளின் பெயர்கள் மாமன்னரிடம் வழங்க்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அந்த பட்டியலில் தேசிய துணைக் காவல்துறை தலைவர் Datuk Seri Ayob Khan Mydin Pitchay, உள்நாட்டுப் பாதுகாப்ப்யு பொது ஒழுங்குத் துறை (JKDNKA) இயக்குநர் Datuk Seri Azmi Abu Kassim, தேசியக் காவல்துறையின் சிறப்புப் பிரிவின் இயக்குநர் Datuk Seri Mohd Khalid Ismail என மூவரின் பெயர் பட்டியல் அடுத்த காவல்துறைத் தலைவராக நியமிக்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது. அதெல்லாம் ஒரு செய்தியும் இல்லை என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim மறுத்தார்.


Perdana Menteri Anwar Ibrahim menafikan laporan bahawa Sultan telah memaklumkan kepadanya calon Ketua Polis Negara baharu menggantikan Tan Sri Razarudin Husain yang bakal bersara. Beliau akan umumkan pengganti selepas perbincangan rasmi dengan Yang di-Pertuan Agong.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *