வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி இளம் வேட்பாளர்களை நிறுத்தும்-ஸாஹிட் ஹமிடி!

- Muthu Kumar
- 25 Nov, 2024
ஈப்போ, நவ. 25-
வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அதிகமான புதிய வேட்பாளர்கள், குறிப்பாக இளம் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. தேசிய முன்னணி மக்களின் ஆதரவை மீண்டும் பெறுவதற்காக வகுக்கப்பட்டுள்ள ஐந்து நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
“நாம் புதிய வேட்பாளர்கள், குறிப்பாக இளம் வேட்பாளர்களை நிறுத்துவது தவிர வேறு வழியில்லை. மக்கோத்தா, நெங்கிரி இடைத்தேர்தலின் வெற்றி கருத்து உண்மை என நிரூபிக்கிறது. இளம் வயது மட்டுமே ஒரு காரணமல்ல மாறாக அடிமட்டத்தில் கிடைக்கும் அனுபவம் சிறந்த வெற்றியைக் கொடுக்கும்," என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை பேரா, ஈப்போவில் நடைபெற்ற தேசிய முன்னணி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் ஸாஹிட் அதனைத் தெரிவித்தார். இதற்கு முன்னர் எதிர்க்கட்சி மாநிலத்தில் உள்ள நெங்கிரி சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் இளம் வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் அத்தொகுதியை மீண்டும் கைப்பற்ற முடிந்ததை ஸாஹிட் நினைவுகூர்ந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *