டத்தோஸ்ரீ பழனிவேல் அமைதியான தலைவராக அறியப்பட்டவர்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஜூன் 17: ம..கா-வின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ  ஜி.பழனிவேல் காலமானதை அடுத்து, ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது தமது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

ம.இ.கா கட்சியில் துன் சம்பந்தன், மாணிக்க வாசகம் போன்ற ஆளுமை மிக்க சிறந்த தலைவர்கள் இருந்தார்கள். அவர்களின் வரிசையில் டத்தோஸ்ரீ பழனிவேல் அவர்களும் ஒரு மாற்று சக்தியாக  வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அது கைகூடவில்லை. இருப்பினும் மக்கள் பணியில் தம்மை இணைத்துகொண்டு இத்தனை ஆண்டுகாலம் பணியாற்றிய அவரின் சேவையை நன்றியோடு நினைவுகூர்வதாகவும், மதமாற்றம் தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் என விடாப்பிடியாக அவர் எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றும் ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.

அவரது இழப்பு பேரிழப்பு என்றும், அமைதியான தலைவராக அவர் அறியப்பட்டவர் என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Pemimpin OMS, P. Thiagarajan merakamkan ucapan takziah atas pemergian bekas Presiden MIC, Dato’ Sri G. Palanivel. Beliau menghargai jasa Palanivel dalam khidmat masyarakat dan usaha menggubal undang-undang berkaitan penukaran agama serta menyifatkan kehilangannya sebagai satu kehilangan besar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *