ஷா அலாம் வெள்ளத்தில் 180 வீடுகள் பாதிப்பு!

top-news

ஜூன் 20,


இன்று அதிகாலை சிலாங்கூரில் பெய்த கனமழையால் ஷா அலாம் பகுதி மிகுந்த பாதிப்பை எதிர்நோக்கியிருப்பதாக ஷா அலாம் மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Ahmad Zaidi Safuan தெரிவித்தார். தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA கனமழை எச்சரிக்கையை விடுத்ததால் அதிகாலை 3 மணி முதல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகவும் ஷா அலாம் Seksyen 32 பகுதியில் உள்ள 180 வீடுகளிலிருந்தவர்களை மீட்டு MBSA Kemuning Utama பொதுமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் ஷா அலாம் மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Ahmad Zaidi Safuan தெரிவித்தார்.

குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் வெள்ள நீரின் அளவும் 3.28 அடி என ஷா அலாம் மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Ahmad Zaidi Safuan தெரிவித்தார். இந்த வெள்ளத்தால் ஷா அலாம் பகுதியில் எந்தவோர் உயிரிழப்பும் பெரும் சேதமும் ஏற்படவில்லை என ஷா அலாம் மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Ahmad Zaidi Safuan தெரிவித்தார்.


Sebanyak 180 rumah di Seksyen 32, Shah Alam, terjejas akibat banjir kilat berikutan hujan lebat awal pagi. Penduduk dipindahkan ke dewan MBSA Kemuning Utama. Tiada kematian atau kerosakan besar dilaporkan, menurut pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *