காஜாங்கில் வீட்டை உடைத்து திருடும் கும்பல்! – காவல்துறை விசாரணை!

- Sangeetha K Loganathan
- 17 Jun, 2025
ஜூன் 17,
காஜாங்கில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டை உடைத்து திருடும் கும்பலைக் காவல்துறை அடையாளம் கண்டிருப்பதாகக் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார். இது தொடர்பான CCTV காணொலிகள் சமூகவலைத்தளங்களில் பரவியதாகவும் பாதிக்கப்பட்ட 66 வயது வீட்டின் உரிமையாளர் காஜாங் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை இச்சம்பவம் தொடர்பாக 66 வயது வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு அவசர அழைப்பின் மூலமாகத் தகவல் தெரிவித்ததும் ரோந்து பணியிலிருந்த காவல் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குச் சென்றதாகவும் Naazron Abdul Yusof தெரிவித்தார். திருடர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைய முயற்சித்ததாகவும் ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் அப்பகுதியிலிருந்து வெளியேறியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Polis Kajang mengesan kumpulan pecah rumah yang cuba memecah masuk sebuah rumah milik lelaki berusia 66 tahun di kawasan perumahan. Percubaan memecah masuk melalui pintu belakang gagal. Rakaman CCTV membantu polis mengenal pasti suspek dan siasatan diteruskan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *