போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு விண்ணப்பித்த ஐவர் கைது!

top-news

ஜூன் 24,


வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவுக்குக் கொண்டு வரும் விண்ணப்பத்தில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்திய ஒரு பெண் உட்பட ஐவரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்தது. கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் பெண் என்றும் மற்றொருவர் Bangladesh ஆடவர் என்றும் தெரிய வந்துள்ளது. நேற்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணிவரையில் அவர்கள் ஐவரிடம் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் விசாரணைக்குப் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் Selangor மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Hairuzam Mohmad Amin@Hamim தெரிவித்தார்.

கடந்த 2023 முதல் 2024 வரையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காகச் சம்மந்தப்பட்ட நிறுவனம் தொடர்ந்து விண்ணப்பம் செய்ததாகவும் விண்ணப்பத்தில் பயன்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் முக்கிய ஆவணங்கள் போலியானவை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததால் அவர்கள் ஐவரையும் 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும்படி Majistret நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டதாகவும் Selangor மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Hairuzam Mohmad Amin@Hamim தெரிவித்தார்.


Lima individu termasuk seorang wanita dan seorang warga Bangladesh ditahan SPRM kerana disyaki menggunakan dokumen palsu dalam permohonan membawa masuk pekerja asing ke Malaysia. Permohonan melibatkan tempoh 2023 hingga 2024 dan kini mereka direman empat hari.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *