செராஸில் இருவர் சுட்டுக் கொலை! – குண்டர் கும்பலின் தாக்குதல்!

- Sangeetha K Loganathan
- 17 Jun, 2025
ஜூன் 17,
இன்று நள்ளிரவு செராஸில் உள்ள வணிகத் தலத்தின் வாசலில் குண்டர் கும்பலால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். வணிக வளாகத்தின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை நோக்கி இருவரும் தனது குடும்பத்துடன் நடந்து சென்றுக் கொண்டிருக்கும் போது தலைக்கவசம் அணிந்திருந்த ஒரு கும்பல் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato' Rusdi bin Mohd Isa தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் முகமூடியும் தலைக்கவசமும் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண CCTV காணொலிகளைச் சேகரித்து வருவதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato' Rusdi bin Mohd Isa தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவரும் 40 வயதுள்ள சரவாக் சிபூவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா மேற்கொண்ட இருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களும் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படவில்லை என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato' Rusdi bin Mohd Isa உறுதிப்படுத்தினார். உயிரிழந்தவர்களில் உடலில் பல துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்ததால் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato' Rusdi bin Mohd Isa தெரிவித்தார்.
Dua lelaki dari Sibu, Sarawak maut ditembak kumpulan samseng di hadapan sebuah pusat komersial di Cheras. Suspek bertopeng dan bertopi keledar melepaskan tembakan ketika mangsa bersama keluarga. Polis Kuala Lumpur sedang mengesan suspek melalui rakaman CCTV.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *