வாகனம் மரத்தில் மோதி இருவர் பலி!

top-news

ஜூன் 23,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரமிருந்த மரத்தில் மோதியதில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்று காலை 6.51 மணியளவில் விபத்துக் குறித்து பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினருடன் விரைந்ததாக மலாக்கா மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநரன HAFIDZATULLAH RASHID தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் 27 வயது 28 வயது உள்ளூர் இளைஞர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மலாக்கா KLEBANG வழியாக JALAN PANTAI செல்லும் சாலையில் PROTON WIRA வாகனம் அதிவேகத்தின் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரையும் காலை மணி 7.17 க்கு வாகனத்திலிருந்த வெளியே மீட்டதாகவும் உயிரிழந்த இருவரின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக மலாக்கா பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் விபத்துக் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Dua pemuda tempatan maut di tempat kejadian selepas kereta Proton Wira yang dinaiki terbabas lalu merempuh pokok di Jalan Pantai, Klebang. Kejadian berlaku sekitar jam 6.51 pagi dan kedua-dua mangsa dikeluarkan dari kenderaan oleh pasukan penyelamat

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *