கோயிலில் RM50,000 ஊழல்! தலைவரும் செயலாளரும் கைது!

top-news

ஜூன் 18,


மலாக்காவில் உள்ள ஒரு கோயிலுக்குச் சொந்தமான RM50,000 நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கோயிலின் தலைவரையும் செயலாளரையும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது. கடந்த மாதம் சம்மந்தப்பட்ட கோயில் நிர்வாக உறுப்பினர்களிடமிருந்து இது தொடர்பானப் புகார் கிடைத்ததும் மலாக்கா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை மேற்கொண்டதாகவும் நேற்று காலை 11.45 மணிக்குக் கோயில் தலைவரும் கோயில் செயலாளரும் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Adi Supian Shafie தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் 61 வயது 74 வயதுள்ள முதியவர்கள் என்பதால் இன்று Ayer Keroh Majistret நீதிமன்றத்தில் ஜாமின் கோரிய நிலையில் அவர்களின் ஜாமின் மனுவை ரத்து செய்து ஜூன் 23 வரையில் தடுப்புக் காவலில் வைக்கும்படி Ayer Keroh Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரும் கடந்த ஆண்டு கோயில் பொது நிதியான RM50,000 பணத்தை, நிர்வாகத்தின் அனுமதியின்றி தனிப்பட்ட செலவுக்காகப் பயன்படுத்தியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மலாக்கா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Adi Supian Shafie தெரிவித்தார்.


Dua pegawai pengurusan kuil di Melaka, berusia 61 dan 74 tahun, ditahan SPRM atas dakwaan menyalahgunakan dana awam berjumlah RM50,000 tanpa kelulusan pengurusan. Mahkamah Majistret Ayer Keroh memerintahkan tahanan reman hingga 23 Jun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *