இபிஎப் 2ஆம் கணக்கிலிருந்து சுகாதார காப்புறுதித் திட்டம்: கட்டாயமானதல்ல!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 21-

ஊழியர் சேமநிதி வாரியத்தின் இரண்டாவது கணக்கிலிருந்து அரசாங்கத்தால் முன்மொழியப் பட்டிருந்த சுகாதார காப்புறுதித் திட்டம். தன்னார்வ முறையிலானதே தவிர, கட்டாயமான ஒன்றல்ல.

விரிவான காப்புறுதித் திட்டம் வேண்டும் என்பவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யவே இந்த அணுகுமுறை முன்மொழியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.தற்போது 32 விழுக்காட்டு சுகாதாரச் செலவுகள், காப்புறுதி பாதுகாப்பைக் கொண்டிராத நோயாளிகளால் செலுத்தப் படுவதாக முகநூல்பதிவில், டாக்டர் சுல்கிப்ளி கூறியிருந் தார்.

இந்த அணுகுமுறையின் மூலம் மக்களின் நிதிச் சுமையை அதிகரிக்காமல், விரைவான மற்றும் தரமான தனியார் சுகாதாரப் பராமரிப்புக்கான சேவையை விரிவுபடுத்த அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாகவும் அவர் அப்பதவில் விவரித்திருந்தார். பெரும்பாலான மக்களுக்குக் காப்புறுதியை முன்னுரிமைப்படுத்தும் சிங்கப்பூர் போன்ற நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு இத்திட்டம் உத்வேகம் பெறுவதாகவும் டாக்டர் சுல்கிப்ளி கூறினார்.

மக்கள் தங்கள் மாதாந்திர சுகாதார காப்புறுதிக்குப் பங்களிக்கும் வகையில் சேமநிதி வாரியத்தின் இரண்டாவது கணக்குகளைப் பயன்படுத்த அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் இன்று டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.

Kerajaan mencadangkan skim insurans kesihatan sukarela menggunakan Akaun 2 KWSP. Menteri Kesihatan, Dr. Zulkifli Ahmad menjelaskan ia bertujuan memberi akses rawatan berkualiti tanpa membebankan rakyat, serta mencontohi sistem negara seperti Singapura yang utamakan perlindungan kesihatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *