அன்வாருக்கு எதிராக தேசத்துரோக கட்டுரை! - புத்ரா ஜெயா PKR போலீஸில் புகார்

- Shan Siva
- 15 Jul, 2025
புத்ராஜெயா, ஜூலை 15: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான
போராட்டத்தை ஊக்குவிக்கும் தேசத்துரோகக் கட்டுரை தொடர்பாக பாஸ் கட்சியின் ஆதரவு ஊடகமான
ஹரகா டெய்லிக்கு எதிராக புத்ராஜெயா பிகேஆர் போலீஸ் புகார் அளித்துள்ளது.
அந்தக்
கட்டுரையில் மலேசியர்களைத் தூண்டும் தேசத்துரோக உள்ளடக்கம் இருப்பதாக மாவட்ட
காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே நடந்த செய்தியாளர் சந்திப்பில், அந்தப் பிரிவின் துணைத் தலைவர் ஷெரிப் ஜீவ்
கூறினார்.
இந்தக்
கட்டுரையையும் திட்டமிடப்பட்ட போராட்டங்களையும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124B
(நாடாளுமன்ற
ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயலைச் செய்ததற்காக) அல்லது ஏதேனும்
பொருத்தமான சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு காவல்துறையை தாங்கள் கேட்டுக்கொள்வதாக அவர்
கூறினார்.
ஜூலை 26 ஆம் தேதி திட்டமிடப்பட்ட போராட்டம் நாட்டின்
அமைதியான வாழ்க்கை முறைக்கும் அதன் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் அச்சுறுத்தலாக
மாறக்கூடும் என்று ஷெரிப் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *