ஈரான்- இஸ்ரேல் மோதலை கண்காணிக்கும் தற்காப்பு அமைச்சு!

top-news
FREE WEBSITE AD

கோத்தா திங்கி, ஜூன் 22-

வட்டார பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலன்கள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதால், ஈரான்-இஸ்ரேல் மோதலின் அண்மைய நிலவரங்களைத் தற்காப்பு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. உலகளாவிய விநியோகச் சங்கிலி, உலகப் பொருளாதாரம் மற்றும் மலேசியர்களின் பாதுகாப்பைப் பாதிக்கும் சாத்தியத்தை இது கொண்டிருப்பதால், இச்சூழல் மிகவும் கவலையளிப்பதாகத் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமாட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

உலகப் போர் ஏற்படும்போது அனைத்து நாடுகளும் பாதிக்கப்படுகின்றன. ஏனெனில், எண்ணெய் விலை உயரும், விநியோகம் துண்டிக்கப்படும், சுதந்திரமான உலக வர்த்தகம் சீர்குலைந்து, வர்த்தக நாடுகளைப் பாதிக்கும். பின்னர் இறுதியில் மக்களும்
பாதிக்கப்படுவர். எனவே மோதல் விரிவடையாமல் இருக்க நாம் அதனைக் கண்காணித்து கவனம் செலுத்துவது முக்கியம்," என்று அவர் கூறினார்.

நேற்று. ஜொகூர், கோத்தா திங்கி, கம்போங் கெம்புட்டில் பெந்தொங் மூடா இஞ்சி அறுவடை நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர்,கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினருமான காலிட் நோர்டின் செய்தியாளர்களிடம் பேசினார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றிய புரிதலை ஈரான்-இஸ்ரேல் மோதல் வழங்கும் நிலையில், மலேசியா அதன் தேசிய தற்காப்புத் தயார்நிலையை வலுப்படுத்த இது உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.

Malaysia memantau konflik Iran-Israel kerana berpotensi menjejaskan keselamatan rakyat, ekonomi global dan rantaian bekalan. Menteri Pertahanan Datuk Seri Mohamad Khaled Nordin menyatakan bahawa keadaan ini perlu diperhatikan bagi mengelak kesan buruk kepada negara dan rakyat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *