ஓய்வூதிய முறைகளில் சீர்திருத்தம்!

- Muthu Kumar
- 19 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன்19-
மலேசியாவின் ஓய்வூதிய முறைகளில் சீர்திருத்தம் செய்ய ஊழியர் சேமநிதி வாரியம் உறுதிபூண்டுள்ளது. நீண்ட ஆயுட்காலம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் மாற்றம் கண்டுள்ள வேலை முறைகள் ஆகியவற்றுக்கு இணங்க ஓய்வூதிய முறை இருக்க வேண்டும் என்று இபிஎப்பின் தலைமை செயல்முறை அதிகாரி அஹ்மாட் சுல்கர்னைன் ஓன் தெரிவித்திருக்கிறார்.
ஓய்வூதிய முறையை நவீனமயமாக்குவதிலும். வாழ்க்கை நிலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அதற்கான தயார்நிலைகளை விரிவுபடுத்துவதிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் கவனம் செலுத்தும் என்று அஹ்மாட் சுல்கர்னைன் ஓன் கூறினார்.
1950களில் மலேசியாவின் ஆயுட்காலம் சுமார் 54 வயதிலிருந்து இன்று 75 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2050 ஆம் ஆண்டுக்குள் 81 வயதை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மலேசியர்கள் நீண்ட காலம் வாழ்வது மட்டுமல்லாமல் நிதி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தயாராக இருப்பதை உறுதி செய்வது இப்போது நமது பணியாகும். என்றார் அவர்.நேற்று. 2025ஆம் ஆண்டு இ.பி.எப் உலக சமூக நல்வாழ்வு மாநாட்டில் வழங்கிய தொடக்க உரையில் அஹ்மாட் சுல்கர்னைன் அவ்வாறு கூறினார்.
ஒரே வேலை அல்லது துறைகளில் வேலை செய்து பணி ஓய்வு பெறும் மக்களுக்கு தற்போதைய ஓய்வூதிய முறை உருவாக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.ஆனால், தொழில்நுட்பம் தொழில்களை மறுவடிவமைத்து வருவதால், இனி அந்த ஓய்வூதிய முறை பொருத்தமாக இருக்காது என்று அஹ்மாட் சுல்கர்னைன் விளக்கினார்.
KWSP komited reformasi sistem pencen sejajar peningkatan jangka hayat, kos sara hidup dan perubahan kerjaya. Ketua Pegawai Eksekutif Ahmad Zulqarnain menyatakan keperluan sistem moden agar rakyat bersedia dari segi kewangan dan sosial menjelang usia tua.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *