வாகனத்தில் தீ! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஜோடி!

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், ஜூன் 20: இன்று காலை, சிப்பாங், மாஜு எக்ஸ்பிரஸ்வேயின் (MEX) கி.மீ.21.8 இல் ஒரு வாகனம் தீப்பிடித்ததில், ஆடவர் ஒருவரும் அவரது வருங்கால மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 சம்பந்தப்பட்ட வாகனத்தின் 31 வயது ஓட்டுநர், சைபர்ஜெயாவை விட்டு வெளியேறும்போது திடீரென இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினார்.

பிரேக்குகள் சரியாக வேலை செய்யவில்லை என்று தனது வருங்கால மனைவி தனக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், பிரேக்குகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதனை அடுத்து வாகனத்தின் பின்புறத்திலிருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிப்படுவதை பின்னால் வந்த வாகனமோட்டிகள் எச்சரித்ததாகவும், தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டே இருந்ததால். தாங்கள் தீயைக் கவனித்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் காலை 10.50 மணிக்கு பேரிடர் அழைப்பு வந்ததை அடுத்து, சைபர்ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (PBB சைபர்ஜெயா) ஆறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அவர்கள் வந்தபோது, ​​வாகனம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது .அதில் 95 சதவீதம் சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக இரு பயணிகளும் காயமின்றி தப்பினர். தீ விபத்துக்கான காரணம் தற்போது விசாரணையில் உள்ளது!

Sebuah kereta terbakar di MEX Highway berhampiran Cyberjaya. Pemandu dan tunangnya terselamat tanpa cedera selepas menyedari kerosakan brek. Kebakaran memusnahkan 95% kenderaan. Punca kebakaran masih dalam siasatan oleh pasukan bomba.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *