செலாயாங் பிகேஆர் இளைஞர் பகுதி கலைக்கப்படவில்லை-13 பேர் மட்டுமே வெளியேறியுள்ளனர்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24-

சிலாங்கூரின் செலாயாங் பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதி கலைக்கப்பட்டதாகக் கூறப்படுவதை அக்கட்சி மறுத்துள்ளது.இளைஞர் பகுதியின் 26 செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அதாவது பதினெட்டுப் பேர் பதவி விலகினால் மட்டுமே அது கலைக்கப்பட்டதாகப் பொருள்படும் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ஃபூசியா சாலே நேற்று தெரிவித்தார்.

இளைஞர் பகுதியின் செயற்குழுவில் மொத்தம் 26 பேர் இடம்பெற்றிருப்பர். அவர்களுள் பதினெட்டு பேர் தேர்தல் வழி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எட்டு பேர் நியமன உறுப்பினர்கள். மொத்தப் பேரில் மூன்றில் இரண்டு பங்கினரான பதினெட்டு பேர் பதவி விலகினால் மட்டுமே அப்பகுதி கலைக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

செலாயாங் பிகேஆர் இளைஞர் பகுதியிலிருந்து முதலில் 17 பேர் ராஜினாமா செய்தனர். அவர்களுள் மூவர் பின்னர் தங்களின் ராஜினாமாவை மீட்டுக் கொண்டனர். அதன் பிறகு மற்றொருவரும் அவ்வாறு செய்தார். இதனால், ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை பதின்மூன்றாகவே உள்ளது என்று ஃபூஸியா சுட்டிக் காட்டினார்.

மே மாத முற்பகுதியில் அத்தொகுதியைச் சேர்ந்த இளைஞர் பகுதித் தலைவர்கள் பலர் பதவி விலகியதால் அத்தொகுதி செயலிழந்த நிலையில் உள்ளது என்று அத்தொகுதியின் முன்னாள் தலைவர்கள் சிலர் நேற்று தெரிவித்திருந்தனர்.

PKR menafikan pembubaran sayap pemuda cabang Selayang. Hanya 13 daripada 26 ahli jawatankuasa telah meletak jawatan, tidak mencapai dua pertiga yang diperlukan untuk pembubaran. Tiga ahli menarik balik peletakan jawatan mereka, jelas Fuziah Salleh.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *