பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் போதைப்பொருள் விற்பனை! - ஆடவர் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில்   போதைப்பொருள் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 48 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செவ்வாய்கிழமை இரவு 11.50 மணியளவில் ஜாலான் துன் டான் சியூ சின் என்ற இடத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், அந்நபரிடமிருந்து  652 ரிங்கிட் மதிப்பிலான 26.1 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாகவும் டாங் வாங்கி போலீஸ் தலைவர் சுலைஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.

சந்தேக நபரிடம் பல்வேறு போதைப்பொருள் மற்றும் குற்றவியல் பதிவுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.  போதைப்பொருள் கடத்தல் மற்றும் சுயநிர்வாகம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவர் டிசம்பர் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு பொழுதுபோக்கு மையங்களுக்கு வருபவர்களுக்கு மெத்தம்பெத்தமைன் விநியோகிப்பதில் ஈடுபட்டதாக நம்பப்படும் 30 வயதுடைய நபரையும் போலீசார் கைது செய்ததாக சுலைஸ்மி கூறினார்.

கடந்த திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஜாலான் டேவான் பஹாசாவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவர் ஓட்டி வந்த பெரோடுவா பெஸ்ஸாவை போலீசார் சோதனை செய்ததில் 650 கிராம் மெத்தாம்பெத்தமைன் மற்றும் 8.2 கிராம் கெத்தாமைன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு மொத்தம் RM6,140 ஆகும்.

அவருக்கு குற்றவியல் பதிவு இல்லை.  இந்நிலையில் டிசம்பர் 1 ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *