ஆராவ் தொகுதித் தலைவர் தேர்தலில் பெர்லிஸ் மந்திரி பெசார் படுதோல்வி!

top-news
FREE WEBSITE AD

கங்கார்,ஜூன் 23-

பெர்லிஸ் மாநில பாஸ் தலைவரும் மாநில மந்திரி பெசாருமான சுக்ரி ரம்லி, கட்சித் தேர்தலில் ஆராவ் தொகுதித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஆராவ் தொகுதியின் நடப்புத் தலைவர் சோலாஹுடின் அஸ்மியை எதிர்த்துப் போட்டியிட்ட சுக்ரிக்கு வெறும் 43 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், சோலாஹுடினுக்கு 128 வாக்குகள் கிடைத்தன.

அத்தொகுதித் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடந்தபோது, சுக்ரிக்கு இந்த அதிர்ச்சித் தோல்வி ஏற்பட்டது.
மற்றொரு நிலவரத்தில், பெர்லிஸ் மாநில சட்டசபை சபாநாயகர் ருசிலி எய்ஸானும், தமது தொகுதித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில் படுதோல்வியுற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரிட்சுவான் ஹஷிம் அதில் வெற்றி பெற்றார் குவார் சஞ்சி சட்டமன்ற உறுப்பினரான ரிட்சுவானுக்கு 135 வாக்குகள் கிடைத்த வேளையில், ருசிலிக்கு வெறும் 34 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

தொகுதிகளுக்கான தேர்தல்களில் பெர்லிஸ் மாநிலத்தில் சில முக்கிய உயர்மட்டத் தலைவர்கள் தோல்வி அடைந்திருப்பதை, அவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று, ஆராய் தொகுதியின் புதிய தலைவர் சோலாஹூடின் பாஸ் கட்சி உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.

Menteri Besar Perlis, Sukri Ramli, tewas dalam pemilihan Ketua PAS Arau kepada Solahudin Asmi. Speaker DUN, Rus’sele Eizan, turut kalah kepada Ridzuan Hashim. Kekalahan pemimpin utama ini dianggap bukan penolakan, menurut ketua baharu PAS Arau.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *