தேசிய ஊடகவியலாளராக பெர்னாமா தலைவர் டத்தோஸ்ரீ வோங் தேர்வு!

- Muthu Kumar
- 22 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 22-
பெர்னாமா தலைவர் டத்தோஸ்ரீ வோங் கன் வய்தேசிய ஊடகவியலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்விருதை, உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ சம்ரி அப்துல் காடிர்வழங்கி கௌரவித்தார்.
1984ஆம் ஆண்டு, பினாங்கு, தி ஸ்டார் நாளிதழில் நிருபராகத் தமது பணியைத் தொடங்கிய 64 வயதான வோங், இத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள ஸ்டார் மீடியா குழுமத் தலைமையகத்தில் பல்வேறு பதவிகளை அவர்
வகித்துள்ளார்.
இந்த உயரிய விருதை பெறும் 14ஆவது ஊடகவியலாளராக வோங் திகழ்கிறார். 'எனக்கு இது மிகவும் நெகிழ்ச்சியான தருணம்.
எனது 40 ஆண்டுக்கால ஊடகவியலாளர் வாழ்க்கையில் இது ஒரு சிறப்பம்சம். நான் பினாங்கில் ஓர் இளைய நிருபராகத் தொடங்கினேன். நான் குற்றவியல் செய்திகளை எழுதினேன். அனைத்தையும் எழுதினேன். நான் மிகவும் மகிழ்கிறேன். மேலும் இந்த விருதை வயதான, இளம் மற்றும் மூத்த ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.
ஊடகவியலாளர்களின் பணி எனிதானதல்ல என்பதை நாங்கள் அறிவோம். அச்சு ஊடகமோ, சமூக ஊடகமோ 'அனைத்துமே கடினம்தான்”, என்றார் அவர் பகுப்பாய்வு, வர்ணனைகளை , உருவாக்குவதன் மூலம் தங்கள் எழுதும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இளம் ஊடகவியலாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
Datuk Seri Wong Chun Wai, Pengerusi BERNAMA, menerima Anugerah Wartawan Kehormat atas sumbangan lebih 40 tahun dalam bidang kewartawanan. Beliau menasihati wartawan muda supaya terus menajamkan kemahiran melalui penulisan dan analisis mendalam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *