கல்வியை அரசியலாக்காதீர்! கல்வி அமைச்சர்!

top-news

ஜூன் 17,


பள்ளிகளில் இருக்கும் சிக்கலையோ மாணவர்கள் கட்டொழுங்கு சம்மதப்பட்ட பிரச்சனையையோ அரசியலாக்க வேண்டாம் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek எச்சரிக்கை விடுத்தார். பள்ளிக்கூடங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க மாவட்ட மாநில அளவில் பொறுப்பானக் கல்வி அதிகாரிகள் உள்ளனர். முன்னதாகத் திரங்கானுவில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் பெற்றோர்களும் மாணவர்களைத் தாக்கியதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என்றும் Fadhlina Sidek தெரிவித்தார். ‘

திரங்கானுவில் இரு மாணவர்களுக்கிடையிலான கைகலப்பைப் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட ஆசிரியர்களும் வேடிக்கை பார்த்ததாக வெளிவந்த செய்தியை Fadhlina Sidek மறுத்தார். சம்பவத்தின் போது சம்மந்தப்பட்ட ஆசிரியர்களும் பெற்றோர்களும் கைகலப்பில் ஈடுபட்ட இரு மாணவர்களையும் தடுக்க முன்வந்ததாகவும் சில வினாடிகள் மட்டுமே இரு மாணவர்களும் கைகலப்பில் ஈடுப்பட்டதாக நம்பப்படுகிறது. இது தொடர்பாக பல வகையில் கதைகளைக் கட்டவிழ்த்து விடுவதையும் அரசியல் நோக்கத்துடன் கருத்து தெரிவிப்பதையும் நிறுத்தும்படி கல்வி அமைச்சர் Fadhlina Sidek எச்சரிக்கை விடுத்தார்.


Menteri Pendidikan Fadhlina Sidek menegaskan isu disiplin pelajar di sekolah tidak harus dipolitikkan. Beliau menafikan laporan insiden di Terengganu yang mendakwa guru dan ibu bapa berdiam diri semasa pergaduhan pelajar berlaku. Pihak sekolah bertindak segera mengawal situasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *