எந்த ஓர் அரசியல் கட்சியுடனும் புதிய ஐஜிபிக்கு தொடர்பு இல்லை-போலீஸ் படை உறுதிப்படுத்தியது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 23-

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் எந்த ஓர் அரசியல் கட்சியிலும் உறுப்பினராகவோ அல்லது எந்தப் பதவியையும் வகிக்கவோ இல்லை என்று. அரச மலேசிய போலீஸ் படை நேற்று உறுதிப்படுத்தியது.

ஓர் உள்நாட்டு அரசியல் கட்சியுடன் காலிட்டை இணைத்து ஒரு தகவல் சாதனத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட தவறான செய்தியை போலீஸ் படை கடுமையாகக் கருதுவதாக, அப்படையின் செயலாளர்
டத்தோ கமாருஸாமான் அப்துல்லா தெரிவித்தார்.

"அத்தகைய செய்தி பொய்யானது, தவறான தகவலை வழங்குகிறது மற்றும் தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் பாதுகாப்புப் படைகளின் நம்பகத்தன்மை மீது அது சந்தேகத்தையும் ஏற்படுத்தச் செய்கிறது.

"சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடுவதில் தகவல் சாதனங்களின் அலட்சியத்தையும் போலீஸ் படை கடுமையாகக் கண்டிக்கிறது. இது போலீஸ் படைக்கும் சம்பந்தப்பட்ட நபரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளது" என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் கமாருஸாமான் தெரிவித்தார்.

தகவல் சாதன நெறிமுறைகள், வெளியிடப்பட்ட அனைத்து அறிக்கைகளும் சரிபார்க்கப்பட்ட உண்மைகள், முழுமையான சரிபார்ப்பு மற்றும் எழுத்தின் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.போலீஸ் படை நடுநிலைமை, ஒருமைப்பாடு மற்றும் தொழில்முறை கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. என்றும் அதனால் போலீஸ் படை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைக்கச் செய்யும் எந்தவொரு நடவடிக்கையையும் போலீஸ் படை பொறுத்துக் கொள்ளாது என்றும் கமாருஸாமான் வலியுறுத்திக் கூறினார்.

PDRM menafikan dakwaan bahawa Ketua Polis Negara baharu, Datuk Seri Mohd Khalid Ismail, terlibat dalam mana-mana parti politik. Polis mengecam penyebaran maklumat palsu yang menjejaskan reputasi institusi dan menegaskan pentingnya laporan yang sahih serta beretika.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *