பிரிக்பீல்ட்ஸ், செராசில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குண்டர் கும்பல் அம்சம் இருக்கிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 21-

பிரிக்பீல்ட்ஸ் மற்றும் செராஸ் பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களிலும் குண்டர் கும்பல் அம்சங்கள் இருப்பது போலீசின் தொடக்ககட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் இவ்விரு சம்பவங்களிலும் குண்டர் கும்பல் அம்சங்கள் அடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் யூசோப் ஜான் முகமட் தெரிவித்தார்.

இருந்த போதிலும் சம்பந்தப்பட்டவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களா இல்லையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு சம்பந்தப்பட்ட அனைவரையும் தேடும் பணிகள் தீவிரமாக
மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் செய்தியாளர்களிடம் பேசிய போது டத்தோ முகமட் யூசோப் ஜான் முகமட் குறிப்பிட்டார்.

முன்னதாக பிரிக்பீல்ட்ஸ், செராஸ் ஆகிய பகுதிகளில் 4 நாட்களில் 2 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்த போதிலும் தலைநகரில் பாதுகாப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக போலீஸ் இதற்கு முன்பு உத்தரவாதம் அளித்தது.

Brickfields dan Cheras dilanda dua insiden tembakan dalam empat hari. Siasatan awal polis mendapati unsur gengsterisme terlibat. Namun, penglibatan penembak upahan belum disahkan. Polis giat mengesan semua suspek dan menjamin keselamatan ibu kota masih terkawal.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *