இன பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் தேவையில்லை! – ஒற்றுமைத் துறை அமைச்சர் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 18: இன பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தண்டனைச் சட்டம், தேசத்துரோகச் சட்டம் 1948, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 போன்ற தற்போதைய சட்டங்கள் இன மற்றும் மதக் குற்றங்களைச் சமாளிக்க போதுமானவை என்று அவர் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான், பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அரசியல் பிரமுகர்கள் மற்றும் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட இனப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இனப் பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுவது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து லிம் கேட்டிருந்தார்.

சிப்பாங்கில் சோள வியாபாரி சம்பந்தப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி லிம் இந்தக் கேள்வியை எழுப்பினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *