இந்த மூவரும் ஒரு புதிய கட்சியை உருவாக்க வேண்டும்- புவாட்டின் கேலிப்பேச்சு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 21-

கைரி ஜமாலுடின் போன்ற முன்னாள் அம்னோ தலைவர் உட்பட மேலும் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு புதிய கட்சியை உருவாக்க வேண்டும் என்று. அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி கேலியான பேச்சுக்கு மத்தியில் பரிந்துரை ஒன்றை முன்வைத்துள்ளார்.

கைரி ஜமாலுடின், பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மி நிக் அஹ்மாட், ஷாரில் ஹம்டான், அக்மால் நசிர், சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், வான் சைஃபுல் வான் ஜன் மற்றும் லெர்ரி சிங் ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து ஒரு புதிய கட்சியைத் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கேலி செய்திருக்கின்றார்.

"கால்பந்தாட்டத்தில், பல ஜாம்பவான்கள் ஒன்று சேர்ந்து விளையாடினால், அக்குழு மிகவும் வலிமைமிக்கதாக இருக்கும். தொடர்ந்து பல ஆண்டுகளாக வெற்றியையும் நிலைநாட்டி வரும்" என்று. நேற்று வியாழக்கிழமை முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவில் புவாட் குறிப்பிட்டுள்ளார்.

"ஒருவேளை அத்தகைய ஒரு கட்சி அமைக்கப்பட்டால், அக்கட்சி இயல்பாக ஏழு முதல் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கும் நிலையும் ஏற்படும். மலேசியாவில் தற்போது தனி ஒரு கட்சி நாட்டை ஆட்சி புரியக் கூடிய சூழல் இல்லாததால், அக்கட்சி பேரம் பேசும் அளவுக்கு சக்தியையும் பெற்றிருக்கும்" என்று அவர் கூறினார்.

கடந்த மே மாதம் 28ஆம் தேதி நடந்த பிகேஆர் கட்சித் தேர்தலில், துணைத் தலைவர் மற்றும் உதவித் தலைவர் பதவிகளை தற்காத்துக் கொள்வதில் தோல்வியுற்ற, முறையே ரஃபிஸியும் நிக் நஸ்மியும் தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த போதிலும் அவர்கள் இருவரும் இன்னமும் பிகேஆர் கட்சியின் உறுப்பினர்களாகவே இருந்து வருகின்றனர்.

நம்பிக்கை மோசடி புரிந்ததாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், மூவார் நாடாளுமன்ற உறுப்பி னர் சைட் சாடிக், மூடா கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரான லெர்ரி சிங், பார்ட்டி பங்சா மலேசிய கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

எனினும், அரசியல் ரீதியில் மாறுப்பட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் மேற்கூறப்பட்டுள்ள அனைவரும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்ற கேள்வியையும் புவாட் எழுப்பியுள்ளார்.ஆயினும், மலேசியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முயற்சி செய்ய வாழ்த்துகிறேன்" என்று, ஜொகூர் மாநில சட்டசபை சபாநாயகருமான புவாட் கேலியாகப் பேசினார்.


UMNO ahli Majlis Tertinggi, Puad Zarkashi secara sinis mencadangkan Khairy Jamaluddin dan beberapa bekas pemimpin politik menubuhkan parti baharu. Beliau menyatakan gabungan ini mungkin kuat, namun persoalkan bagaimana pemimpin dengan ideologi berbeza boleh bekerjasama secara berkesan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *