சிலாங்கூரிலும் ஜொகூரிலும் நிலவும் மாணவர்கள் நெரிசல் பிரச்சினை மிகவும் கடுமையானது!

top-news
FREE WEBSITE AD

செனாவாங், பிப். 18 -

சிலாங்கூரிலும் ஜொகூரிலும் நிலவி வரும் மாணவர்கள் நெரிசல் பிரச்சினை மிகவும் கடுமையான ஒன்றாக இருந்து வருகிறது. புதிய பள்ளிகளைக் கட்டுவதன் மூலமே இப்பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வை காண முடியும் என்று, கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் கூறியுள்ளார்.

“நாட்டில் குறிப்பாக சிலாங்கூரிலும் ஜொகூரிலும் அதிகமான மாணவர்களின் எண்ணிக்கையால் அங்குள்ள பல பள்ளிகளில் நெரிசல் ஏற்பட்டிருப்பதை நாங்கள் (கல்வி அமைச்சு) அறிந்திருக்கின்றோம்."முதலாம் வகுப்பு மற்றும் ஒன்றாம் படிவத்திற்காகப் பதிந்து கொண்டிருக்கும் நமது பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

இப்பிரச்சினையை களையச் செய்வதற்கான முன்முயற்சிகளை அமைச்சு மேற்கொண்டிருக்கிறது. "சிலாங்கூரில் இரண்டு புதிய பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. தாமான் பெலாங்கி செமினி தேசியப் பள்ளி மற்றும் டெனாய் அலாம் தேசியப் பள்ளி ஆகியவையே அவ்விரு பள்ளிகளாகும்.“இவ்வாண்டில் மேலும் 17 பள்ளிகள் திறக்கப்படவும் உள்ளன” என்று, நெகிரி செம்பிலான், செனாவாங்கில் உள்ள தாமான் ஸ்ரீ பாகி தேசியப் பள்ளிக்கு, நேற்று 10 லட்சம் நோட்டுப்புத்தகங்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அஸ்மான் தெரிவித்தார்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிகழ்வு சுமூகமாக நடைபெற்றதாகக் கூறிய அவர், நாடு முழுமையிலும் 10,237 பள்ளிகளில் 29 லட்சம் ஆரம்பப்பள்ளி மாணவர்களும் 21 லட்சம் இடைநிலைப் பள்ளி மாணவர்களும் தங்களின் பள்ளித் தவணையை தொடங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.

இவர்களில் பாலர் பள்ளிகளில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 51 மழலையர்களும், ஒன்றாம் வகுப்பில் 4 லட்சத்து 6 61 ஆயிரத்து 198 மாணவர்களும், புதுமுக வகுப்பில் 17,547 மாணவர்களும், படிவம் ஒன்றில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 494 மாணவர்களும் சேர்ந்திருப்பதாக அஸ்மான் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *