சைஃபுடினை இயக்குநராக நியமித்தது ஏன்? ஆய்வாளர் கேள்வி!

- Muthu Kumar
- 24 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 24-
பொதுத்தேர்தலில் தோல்வி கண்டதோடு மட்டுமல்லாது கட்சியின் மத்திய செயலவையிலும் இடம்பெற முடியாமல் போன சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலை பிகேஆர் கட்சியின் இரண்டு தேர்தல் இயக்குநர்களுள் ஒருவராக நியமித்தது ஏன் என்று ஆய்வாளர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மற்றொரு தேர்தல் இயக்குநரான நூருல் இஸ்ஸா அன்வாரும் கடந்த பொதுத்தேர்தலில் தோல்வி கண்டவர்தான். ஆயினும், கட்சியின் துணைத் தலைவராக இருப்பதால் அவர் தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் அமாட் ஃபவுசி அப்துல் ஹமீட் தெரிவித்தார்.
ஆனால், சைஃபுடினின் நியமனம் பெரும் புதிராக உள்ளது. நூருல் இஸ்ஸாவுடன் இணைந்து வேலை செய்யக்கூடிய வேறு மக்கள் பிரதிநிதிகள் பிகேஆரில் நிச்சயம் இருப்பார்கள் என்பது திண்ணம். அவர்களுள் யாரையாவது ஒருவரை சைஃபுடினுக்குப் பதில் அப்பதவிக்கு நியமித்திருக்க வேண்டும் என்று ஃபவுசி வலியுறுத்தினார்.
கடந்த பதினைந்தாவது பொதுத்தேர்தலில்
2018ஆம் ஆண்டிலிருந்து தம்வசம் இருந்த கூலிம்-பண்டார் பஹாரு தொகுதியில் அவர் தோல்வி கண்டார்.பெரிக்காத்தான் நேஷனலின் ரோஸ்லான் ஹஷிமிடம் 13,061 வாக்குகள் பெரும்பான்மையில் அவர் தோல்வி கண்டார். அவ்வேளையில் பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளராக சைஃபுடின் பதவி வகித்து வந்தார்.
அப்பொதுத்தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காப்பதில் நூருல் இஸ்ஸாவும் தோல்வி கண்டார். அப்போது பிகேஆர் கட்சியின் உதவித் தலைவராக அவர் இருந்தார்.நூருல் இஸ்ஸாவும் சைஃபுடினும் பிகேஆரின் தேர்தல் இயக்குநர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதாக கடந்த சனிக்கிழமை அக்கட்சி அறிவித்திருந்தது.
Pelantikan Saifuddin Nasution sebagai pengarah pilihan raya PKR dipersoal kerana beliau kalah pilihan raya dan tiada jawatan parti. Sebaliknya, Nurul Izzah difahami dilantik kerana beliau adalah timbalan presiden parti walaupun turut kalah pilihan raya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *