பன் வாக்’ நிகழ்ச்சியில் மந்திரி பெசார்!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

ஜொகூர்பாரு. ஜூன் 18-

ஜொகூர் மந்திரிபெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி, ஜொகூர் மாநில விளையாட்டு தூதராக உள்ள டத்தோ வீரா லீ சோங் வே மற்றும் சமூக செயற்பாட்டாளரான அலிப் சாதார் ஆகியோர். 5 கிலோமீட்டர் தொலைவிலான 'பன் வாக்' நிகழ்வில் கலந்து கொண்டு. சுங்கை பலாங் பகுதியில் உள்ள மசூதியிலிருந்து டேசா ஸ்தே- சந்தார் டே'சாவா வரை வெகு உற்சாகமாக நடந்தனர்.

இந்நிகழ்வில் 1,400க்கும் மேற்பட்டோர் - சமூகத் தலைவர்கள், பள்ளி மாணவர்கள், அரசுத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உள்ளிட்ட பல்வேறுதுறையிலிருந்த பல தரப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இது போன்ற நிகழ்வுகள், ஆரோக்கியமான வாழ்வுமுறையை ஊக்கு ஊக்குவிப்பதுடன் மட்டுமல்லாமல், பரஸ்பர மதிப்பும் ஒற்றுமையும் "பங்சா ஜொகூர்" உறவுமுறையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய தளமாகவும் அமைந்துள்ளது என ஜொகூர் மந்திரி பெசார் வலியுறுத்தினார்.

இதுதான் ஜொகூரின் உண்மையான நடைமுறை: ஒற்றுமையை முன்னிறுத்தும் 'பங்சா ஜொகூர் ஆன்மாவை பிரதிபலிக்கிறது என்றார்.இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய அனைத்து தரப்பினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்த மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி, இந்த மாதிரியான நிகழ்வுகள் ஜொகூரின் வளர்ச்சியை உட்புறமாகவும், வெளிப்புறமாகவும் வலுப்படுத்தும் என கூறினார். ஜொகூர் மாநிலம் வளர்ச்சியின் பாதையில் மட்டுமல்லாது, அதன் மக்கள் ஒற்றுமை, பண்பாடு மற்றும் நல்வாழ்விலும் முன்னேற வேண்டியது அவசியம் என்றார்.

Johor Menteri Besar, Dato’ Onn Hafiz Ghazi bersama lebih 1,400 peserta menyertai acara 'Fun Walk' sejauh 5km. Acara ini memupuk gaya hidup sihat, perpaduan dan semangat “Bangsa Johor”. Beliau menekankan pentingnya kemajuan seiring kesejahteraan rakyat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *