கால்வாயில் மூழ்கி 3 வயது சிறுமி பலி!

- Sangeetha K Loganathan
- 19 Jun, 2025
ஜூன் 19,
நேற்று மாலை நெல் வயல் கால்வாயில் தவறி விழுந்த 3 வயது சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. மாலை 6 மணியளவில் அச்சிறுமியின் உடல் Jerteh சாலையின் கால்வாயில் மிதப்பதைக் கண்ட சிறுமியின் உறவினர் சடலத்தை மீட்டுக் காவல் நிலையத்திற்கு அவசர அழைப்பை விடுத்ததாக BESUT மாவட்டக் காவல் ஆணையர் Azamuddin Ahmad Abu தெரிவித்தார். உயிரிழந்த சிறுமி தன் பாட்டில் வீட்டிலிருந்ததாகவும் யாருக்கும் கவனிக்காததால் வீட்டின் பின்னால் உள்ள கால்வாயில் விழுந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது,
3 வயது சிறுமியின் உடல் வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பிரேதப் பரிசோனையில் 3 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது உறுதிச் செய்யப்பட்டிருப்பதாகவும் BESUT மாவட்டக் காவல் ஆணையர் Azamuddin Ahmad Abu தெரிவித்தார். வீட்டில் இருக்கும் சிறுவர்களின் நடவடிக்கையைப் பெற்றோர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் கவனக் குறைவால் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கும்படியும் BESUT மாவட்டக் காவல் ஆணையர் Azamuddin Ahmad Abu கேட்டுக்கொண்டார்.
Seorang kanak-kanak perempuan berusia tiga tahun ditemukan lemas dalam parit sawah padi di Jerteh. Mangsa dipercayai terjatuh tanpa disedari keluarga. Polis menasihatkan ibu bapa agar lebih peka terhadap keselamatan anak kecil.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *