பினாங்கில் கலவரத்தை ஏற்படுத்திய 46 வெளிநாட்டினர்கள் கைது!

top-news

ஜூன் 22,


பினாங்கில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் முன் கூட்டமாகக் கூடிய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கலவரத்தை ஏற்படுத்தியதற்காக 46 வெளிநாட்டினர்களைக் காவல்துறை கைது செய்திருப்பதாக மத்திய Seberang Perai மாவட்டக் காவல் ஆணையர் Helmi Aris தெரிவித்தார். நேற்று இரவு Bukit Minyak பகுதியில் உள்ள தங்கும் விடுதியின் வாசலில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கூச்சலிடுவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார் பெற்ற நிலையில் சம்பவ இடத்திற்குக் காவல்துறையினர் விரைந்து நிலமையைக் கட்டுப்படுத்தியதாகவும் போலிசாரைத் தாக்க முயன்ற 46 வெளிநாட்டினர்களைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும் மத்திய Seberang Perai மாவட்டக் காவல் ஆணையர் Helmi Aris தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட தங்கும் விடுதி தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தங்க வைக்க குத்தகைக்கு எடுக்கப்பட்ட தங்கும் விடுதியில் புகைப்பிடிக்கவும் மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டதாகவும், தடையை மீறிய வெளிநாட்டினர்களுக்கு அபராதம் விதித்ததால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கும் விடுதியின் குத்தகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கும் விடுதியின் வாசலில் முற்றுகையிட்டு தங்கும் விடுதியின் பாதுகாவலரைத் தாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த கலவரத்தில் ஈடுப்பட்ட 46 வெளிநாட்டினர்களும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய Seberang Perai மாவட்டக் காவல் ஆணையர் Helmi Aris தெரிவித்தார்.


Seramai 46 pekerja asing ditahan polis selepas mencetuskan kekecohan di hadapan asrama mereka di Bukit Minyak, Pulau Pinang. Kekecohan berpunca daripada larangan merokok dan minum arak, diikuti tindakan menyerang pengawal keselamatan dan menyekat asrama.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *