மன்னிப்புப் போதாது! சோள வணிகருக்கு எதிராக YB M.TULSI போலிஸ் புகார்!

- Sangeetha K Loganathan
- 18 Feb, 2025
பிப்ரவரி 18,
சோள வியாபாரி ஒருவர் இந்தியர்களை இழிவாகக் குறிக்கும் வார்த்தையை அடையாளமாகப் பயன்படுத்தி இனவெறியை வெளிப்படுத்தியதற்கு எதிராக இன்று Buntong சட்டமன்ற உறுப்பினர் Thulsi Manogaran, Buntong வாழ் மக்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சம்மந்தப்பட்ட வணிகர் மன்னிப்புக் கோரியதை வரவேற்றாலும் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பல்லினத்துவத்தை அங்கீகரிக்கும் நாடாக மலேசியா இருக்கும் நிலையில் இம்மாதிரியான இனவெறியர்கள் அதற்கு எதிராகச் செயல்படுவதாகவும் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட ஆடவர் மீது வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் Buntong சட்டமன்ற உறுப்பினர் Thulsi Manogaran வலியுறுத்தினார்.
ADUN Buntong Thulsi Manogaran bersama penduduk setempat membuat laporan polis terhadap seorang peniaga jagung kerana menggunakan kata-kata berunsur perkauman. Beliau menegaskan permohonan maaf tidak mencukupi dan menuntut siasatan serta tindakan tegas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *