தாமான் தெலுக் மெர்பாவ் அருகில் நிகழ்ந்த வாகன விபத்தில் மூதாட்டி மரணம்-இருவர் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

சிப்பாங் ஜூன் 18

நேற்று முன்தினம் இரவு இங்கு தாமான் தெலுக் மெர்பாவ் அருகில் சுங்கை பீலேக் சிற்றூரை நோக்கிச் செல்லும் பிரதான சாலையில் நிகழ்ந்த மூன்று வாகனங்களை உட்படுத்திய விபத்தில் 70 வயது மதிக்கத்தக்க
உள்ளூரைச் சேர்ந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இருபது வயது மதிக்கத்தக்க இரு பெண்களுக்கு ஏற்பட்ட படு காயங்களால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவின் இயக்குநர் அமாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார். தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிப்பாங் மாவட்ட தீயணைப்பு படை வீரர்கள் காரில் சிக்கிக் கொண்ட 5 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

எனினும் பலத்த காயங்களுடன் இறந்து போன மூதாட்டியின் உடலை மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறுப் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார். இதில் காரில் பயணம் செய்த 20 க்கும் 55 க்கும் இடைப்பட்ட வயதுடைய மேலும் இரு ஆடவர்களுக்கு சொற்ப காயங்களே ஏற்பட்டதால் பின்னர் அவர்கள் மருத்துவமனையில் வெளி நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர் என்று அமாட் முக்லிஸ் தெரிவித்தார். இந்தச் சாலை விபத்தில் சம்பந்தப்பட்ட 2 பெரோடுவா விவா கார்களும் போர்ட் ரேஞ்சர் வாகனமும் மோசமாக சேதமுற்றதாக அவர் கூறினார்.

Satu kemalangan melibatkan tiga kenderaan di Taman Telok Merbau, Sipang mengorbankan seorang wanita warga emas. Dua wanita cedera parah, lima mangsa diselamatkan. Kenderaan terlibat rosak teruk, mangsa lain hanya mengalami kecederaan ringan dan menerima rawatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *