கோயிலை உடைத்த ஆடவருக்கு ஜாமின்!

top-news

ஜூன் 24,


பத்து பஹாட்டில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலத்தில் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்திய 37 வயதான உள்ளுர் ஆடவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் மீதான வழக்கை விசாரிக்கவும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வழக்கறிஞரை நியமிக்கவும் அவருக்கு RM2,500 ஜாமின் வழங்கப்பட்டிருப்பதாக ஜொகூர் BATU PAHAT Majistret நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. கடந்த ஜூன் 21 அவர் பத்து பஹாட்டில் உள்ள Taman Kapal Layar 1 குடியிருப்புப் பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலத்தைச் சேதப்படுத்தியதாக நம்பப்படுகிறது.

கட்டுமானப் பணிகளுக்கான ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் வழிபாட்டுத் தலத்தைச் சேதப்படுத்தியதாகவும் இதன் விளைவாக RM738 இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஊதியம் வழங்காததால் வழிபாட்டுத் தலத்தில் உள்ள பகுதிகளைச் சேதப்படுத்தியதை 37 வயதான Mohammad Afiq Kasmuni நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். மேலதிக விசாரணைக்காகக் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வழக்கறிஞர் நியமிக்குபடி நீதிபதி Arun Noval Dass உத்தரவிட்டதுடன் RM2,500 ஜாமின் வழங்கியதுடன் எதிர்வரும் ஜுலை 30 வழக்கை விசாரிப்பதாக உத்தரவிட்டார்.


Seorang lelaki berusia 37 tahun didakwa memecah dan merosakkan sebuah kuil di Batu Pahat kerana tidak menerima bayaran kerja pembinaan. Mahkamah membenarkan jaminan RM2,500 dan menetapkan 30 Julai sebagai tarikh sebutan semula kes.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *