வெள்ளத்தில் மூழ்கிய வயல்கள்! விவசாயிகள் பரிதவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு, நவம்பர் 30: கிளந்தானில் கெமுபு வேளாண்மை மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ள 26,000 ஹெக்டேருக்கும் அதிகமான நெல் சாகுபடி நிலம் மற்றும் தானியங்கள் அல்லாத பகுதிகள் கடந்த சில நாட்களாக வெள்ளத்தில் மூழ்கி சேதமுற்றிருப்பதால், விவசாயிகள் பெரும் சோகத்த்க்ஹில் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு விதைகள் விதைக்கப்பட்டன, சில அறுவடைக்கு காத்திருக்கின்றன என்று கிளந்தான் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சுஹா இஸ்மாயில் தெரிவித்தார்.

வெள்ளம் கிட்டத்தட்ட அனைத்து வயல்களையும் மூழ்கடித்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர் என்று அவர் கூறினார்.

விவசாயிகளால் தொடர்ந்து மூன்று பருவங்களாக நெல் பயிரிட முடியாமல் ஆயிரக்கணக்கான ரிங்கிட் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சுஹா கூறினார்.

பாசிர் மாஸ், பாசிர் புத்தே மற்றும் தும்பட் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக அவர் அடையாளம் காட்டினார்.

வறட்சி மற்றும் நீர் வழங்கல் பிரச்சினைகளால் கடந்த இரண்டு பருவங்களில் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக நெல்லை சாகுபடி செய்ய விவசாயிகள் கணிசமான மூலதனத்தை முதலீடு செய்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டு வெள்ளம் அவர்களின் நம்பிக்கையை மீண்டும் சிதைத்துவிட்டது, குறிப்பாக அவர்கள் ரம்ஜான், ஹரி ராயா மற்றும் புதிய பள்ளி பருவத்திற்கான தயாரிப்புகளுக்கான செலவுகளை ஈடுகட்ட அறுவடையை நம்பியிருந்ததால் இந்த வெள்ளம் மேலும் சோகத்திற்குள்ளாக்கிவிட்டது  என்று அவர் கூறினார். இதற்கு அரசுத் தரப்பில் இருந்து உரிய நிவாரணம் தேவை என்று அவர் வலியுறுத்தினார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *