ஈரானிலிருந்து மலேசியர்கள் இன்று இரவு மலேசியா திரும்புவார்கள்! – WISMA PUTRA

- Sangeetha K Loganathan
- 22 Jun, 2025
ஜுன் 22,
ஈரானில் ஏற்பட்டுள்ள போர் சூழலில் இதுவரையில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் Datuk Seri Mohamad Hasan உறுதிப்படுத்தினார். ஈரானில் சிக்கியிருக்கும் மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் முதற்கட்டமாக 17 மலேசியர்கள் உட்பட மொத்தம் 24 பேர் இன்றிரவு மலேசியாவுக்கு வந்தடைவார்கள் என Datuk Seri Mohamad Hasan தெரிவித்தார். ஈரானிலிருந்து மீட்கப்பட்டிருக்கும் 24 பேரும் Turkmenistan வழியாக விமானம் மூலம் இன்றிரவு 10.50 மணிக்கு மலேசியா வந்தடைவார்கள் என Datuk Seri Mohamad Hasan விளக்கமளித்தார்.
ஈரானில் உள்ள மலேசிய தூதரகம் போரின் காரணமாக மூடப்பட்டிருக்கும் நிலையில் தூதரக அதிகாரிகளின் குடும்பங்களும் மீட்கப்பட்டிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் சிலர் மட்டும் தூதரகத்தில் இருப்பதாகவும் ஈரானில் மேலும் மலேசியர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மலேசிய தூதரகத்தை அணுகி அவர்கள் மீண்டும் பத்திரமாக மலேசியாவுக்கு வந்தடைவதைத் தூதரகம் உறுதிச் செய்யும் என Datuk Seri Mohamad Hasan தெரிவித்தார்.
Seramai 24 rakyat Malaysia termasuk 17 individu dikenal pasti akan pulang ke tanah air malam ini dari Iran melalui Turkmenistan susulan konflik di sana. Wisma Putra sahkan tiada rakyat Malaysia tercedera, dan proses pemindahan berjalan lancar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *