கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்த ஐவர் கைது!

top-news

ஜூன் 20,


சர்வதேசக் கடல் எல்லையை மீறி மீன்பிடித்த ஐவரைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையமான Maritime Malaysia கைது செய்திருப்பதாகத் திரங்கானு மாநில Maritime இயக்குநர் Hamiludin Che Awang தெரிவித்தார். நண்பகல் 2.55 மணியளவில் சந்தேகத்திற்குரிய மீன்பிடி படகு Tanjung Gemok சர்வதேசக் கடல் பரப்பில் மிதப்பதைக் கண்டதாகவும் சம்மந்தப்பட்ட மீன்பிடி படகைச் சோதனையிட்டதில் படகிலிருப்பவர்கள் தங்களை மலேசிய மீனவர்கள் என அடையாளப்படுத்திய நிலையில் அவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவில் மீன்பிடி தொழிலில் ஈடுப்பட்ட வெளிநாட்டினர்கள் என கண்டறிந்ததாகவும் திரங்கானு மாநில Maritime இயக்குநர் Hamiludin Che Awang தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ஐவரும் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 26 முதல் 41 வயதுள்ள ஐவரிடமும் முறையான ஆவணங்கள் எதுமில்லை என்றும் சட்டவிரோதமாக Tanjung Gemok மீனவப் பகுதியில் தங்கியிருந்ததாகவும் தெரிய வந்திருப்பதாக திரங்கானு மாநில Maritime இயக்குநர் Hamiludin Che Awang உறுதிப்படுத்தினார். “இது தொடர்பாக, கடலில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்தால் பொதுமக்கள் மற்றும் கடல்சார் சமூகம் தகவல்களை வழங்குமாறு திரங்கானு மாநில Maritime இயக்குநர் Hamiludin Che Awang கேட்டுக்கொண்டார்.


Lima warga Myanmar ditahan kerana menangkap ikan secara haram di perairan Malaysia berhampiran Tanjung Gemok. Mereka gagal mengemukakan dokumen sah dan dikenal pasti menyamar sebagai nelayan tempatan menurut Pengarah Maritim Terengganu, Hamiludin Che Awang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *