ஒற்றுமை கூட்டணியிலிருந்து ம.சீ.ச வெளியேற வேண்டும்!

- Sangeetha K Loganathan
- 23 Jun, 2025
ஜூன் 23,
ஒற்றுமை கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.சீ.ச தனது ஆதரவை மீட்டுக் கொள்ள வேண்டும் என குவாந்தான் மாவட்ட ம.சீ.ச தொகுதித் தலைவரும் முன்னாள் துணை அமைச்சருமான Ti Lian Ker வலியுறுத்தினார். ம.சீ.சவின் தொண்டர்களில் பலரும் பக்கத்தான் கூட்டணியில் ம.சீ.ச இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் பலரும் அதிருப்தியில் இருப்பதாகவும் சமீபக் காலத்தில் ஒற்றுமைக் கூட்டணியிலிருக்கும் கட்சிகள் ம.சீ.சவின் கருத்துகளுக்குச் செவிசாய்ப்பதில்லை என்றும் Ti Lian Ker குற்றம்சாட்டினார்.
இது எனது தனிப்பட்ட முடிவு அல்ல. கடந்த மே 2 கெடா, பேராக், சிலாங்கூர், பகாங் ஆகிய 4 மாநிலங்களின் ம.சீ.ச தலைவர்கள் கூட்டணியிலிருந்து விலகும்படி ம.சீ.ச பொதுச் செயலாளர் Chong Sin Woon-க்கு வலியுறுத்தியதாக Ti Lian Ker தெரிவித்தார். அன்வார் தலைமையிலான ஒற்றுமை கூட்டணிக்கு ம.சீ.ச ஆதரவளிப்பதால் ம.சீ.சவுக்கு என்ன நன்மை? தேர்தலில் அன்வார் கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. ஆதரவில் இருக்கும் ம.சீ.சவின் எந்தவொரு கருத்தையும் மடானி அரசு மதிப்பதில்லை. பெரும்பாலானத் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். அடுத்த தேர்தலில் ம.சீ.ச எந்த மதிரியான வாக்குறுதிகளையும் வழங்க முடியாது. காரணம் அரசாங்கத்தின் எந்த திட்டத்திலும் ம.சீ.ச இல்லை என Ti Lian Ker கடுமையாக விமர்சித்தார்.
Ti Lian Ker mendesak MCA keluar daripada Kerajaan Perpaduan kerana mendakwa suara MCA tidak dihargai. Beliau berkata ramai ahli dan pemimpin akar umbi tidak puas hati serta menyifatkan tiada manfaat diterima sejak menyokong gabungan dipimpin Anwar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *