சௌக்கிட்டில் குடிநுழைவுத்துறை அதிரடி! 124 வெளிநாட்டினர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 19: குடிநுழைவுத் துறை மற்றும் காவல்துறையினரின் சோதனைகளைத் தவிர்ப்பதற்காக ஆவணமற்ற குடியேறி ஒருவர் மெத்தையின் கீழ் ஒளிந்து கொண்ட நிலையில், அந்த நபரின் கால்கள் சோதனை அதிகாரிகள் பார்வையில் விழுந்ததால் பரிதாபமாக அந்நபர் பிடிபட்டார்.

கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து இன்று அதிகாலை நடத்திய கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்ட 124 வெளிநாட்டினரில் அந்த நபரும் ஒருவர் ஆவார்.

ஜாலான் ஹாஜி ஹுசைன், சௌ கிட் பகுதியில் உள்ள 14 மாடி பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை 1 மணிக்கு அதிகாரிகள் இச்சோதனையை மேற்கொண்டனர்.

இச்சோதனையில் மொத்தம் 250 பேரிடம் சோதனை செய்ததில் 124 சட்டவிரோத குடியேறிகள் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 84 இந்தோனேசியர்கள், 17 வங்கதேசத்தினர், இரண்டு மியான்மர் நாட்டவர்கள், நான்கு நேபாளிகள், 14 பாகிஸ்தானியர்கள் மற்றும் மூன்று இந்தியர்கள் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டுச் சோதனையில் மொத்தம் 50 குடிநுழைவுத் துறை பணியாளர்கள் மற்றும் 30 காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *